Saturday 27th of April 2024 07:28:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
கைப்பற்றப்பட்ட இந்தியப் படகுகளை பராமரிப்பதற்கு கடற்படையினர் மறுப்பு!

கைப்பற்றப்பட்ட இந்தியப் படகுகளை பராமரிப்பதற்கு கடற்படையினர் மறுப்பு!


வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை பொறுப்பேற்பதற்கு கடற்படையினர் மறுப்புத் தெரிவித்ததால் இழுபறி நிலை நிலவியதாக தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 23 மீனவர்கள் நேற்றைய நாள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும் படகுகள் இரண்டையும் கடற்படையினர் பொறுப்பேற்கவேண்டும் என்று நீரியல் வளத் திணைக்களத்தினர் வலியுறுத்தியபோதிலும் கடற்படையினர் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

இதனை அடுத்தே படகுகள் இரண்டும் மயிலிட்டித் துறைமுகத்தில் கட்டப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE